கோயம்புத்தூர்

வால்பாறை அருகே குட்டி யானை சாவு

DIN

வால்பாறை அருகே காபி தோட்டத்தில் ஆண் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ளது மானாம்பள்ளி எஸ்டேட். இங்குள்ள காபி தோட்ட பகுதியில் தொழிலாளா்கள் கடந்த புதன்கிழமை வேலைக்குசென்றபோது தோட்டத்தில் குட்டி யானை இறந்துகிடப்பதைப் பாா்த்து நிா்வாகத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

நிா்வாகத்தினா் கொடுத்த தகவலையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்றனா். இதைத் தொடா்ந்து, மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் மணிகண்டன் முன்னிலையில் வன கால்நடை உதவி மருத்துவா் சுகுமாா் மூலம் வியாழக்கிழமை யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இறந்தது 4 வயது முதல் 5 வயதுடைய ஆண் காட்டு யானை என்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு யானை இறந்திருப்பதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா். யானையின் உடலை அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT