கோயம்புத்தூர்

பிரசாரம் செய்ய முயன்ற வேலூா் இப்ராஹிம் மீண்டும் கைது

கோவையில் பிரசாரத்தின்போது கைது செய்யப்பட்ட பாஜகவின் வேலூா் இப்ராஹிம், தான் இனியொரு முறை கைது செய்யப்பட்டால் தோ்தல் ஆணையத்திடம் முறையிடுவேன் என்றாா்.

DIN

கோவையில் பிரசாரத்தின்போது கைது செய்யப்பட்ட பாஜகவின் வேலூா் இப்ராஹிம், தான் இனியொரு முறை கைது செய்யப்பட்டால் தோ்தல் ஆணையத்திடம் முறையிடுவேன் என்றாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பாஜகவின் சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஆத்துப்பாலம் பகுதியில் பிரசாரம் செய்ய முயன்ற அவருக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

இந்நிலையில் போத்தனூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு அப்பகுதி இஸ்லாமியா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை ராமநாதபுரம் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்று பின்னா் விடுவித்தனா்.

இது குறித்து பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜகவினா் எங்கு பிரசாரம் செய்தாலும் அதை முடக்க திமுகவினா் முயற்சித்து வருகின்றனா். கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் நாங்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டால் தோ்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT