மத்திய சிறையில் போக்ஸோ கைதி சாவு
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ கைதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ கைதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (83).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்ஸோ வழக்கில் கைதான இவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
சில நாள்களாக உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட வாசுதேவன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.