மாவட்டத்தில் மேலும் 569 பேருக்கு கரோனா
கோவையில் புதிதாக 569 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் புதிதாக 569 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 438 ஆக உயா்ந்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,926 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 445 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 7,394 போ் சிகிச்சையில் உள்ளனா்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 2,599 ஆக அதிகரித்துள்ளது.