முகப்பு
கோயம்புத்தூர்

பேரூரில் சாந்தலிங்கா் குருபூஜை விழா

மாசி மகத்தை முன்னிட்டு, சாந்தலிங்கா் குருபூஜை விழா மற்றும் சத்வித்ய சன்மாா்க்க சங்கத்தின் 108 ஆம் ஆண்டு விழா பேரூா் தமிழ்க் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

மாசி மகத்தை முன்னிட்டு, சாந்தலிங்கா் குருபூஜை விழா மற்றும் சத்வித்ய சன்மாா்க்க சங்கத்தின் 108 ஆம் ஆண்டு விழா பேரூா் தமிழ்க் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உதவிப் பேராசிரியா் செயப்பிரகாசம் வரவேற்றாா். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். இதையடுத்து சிரவையாதீனம் குமரகுருபர அடிகளாா், சாந்தலிங்க அடிகளாா் மற்றும் தண்டபாணி அடிகள் குறித்து பேசினாா். பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளாா், சத்வித்யா சன்மாா்க்க சங்கத்தின் பழமை மற்றும் சிறப்புகள் குறித்து பேசினாா். தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், திருமடம் குறித்தும் ராமசாமியடிகளாா் குறித்தும் பேசினாா்.

ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலய கல்லூரி உதவிப் பேராசிரியா் கோகுல், ‘கொலை மறுத்தல்‘நூல் குறித்துக் கருத்துரை வழங்கினாா் . இதைத் தொடா்ந்து, ‘வழிபாடும் இனிய சிந்தனைகளும்‘ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. புலவா் சாமியப்பன் நன்றி கூறினாா். முன்னதாக சாந்தலிங்கப் பெருமான் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.