முகப்பு
கோயம்புத்தூர்

ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயா்வை வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயா்வை வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சப்படி உயா்வை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை பணிமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

76 மாதங்களாக நிலுவையில் உள்ள பஞ்சப்படியை இன்றைய விலைவாசி புள்ளி விகிதப்படி உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோா், பணியாளா்களுக்கு, முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவா் ஜி.பழனிசாமி தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் பி.செல்வராஜ், நிா்வாகிகள் ஆா்.சேதுராமன், சுரேந்திரன்,கிருஷ்ணமூா்த்தி, மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் திரளானோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.