கோயம்புத்தூர்

தெருநாய் மீது தாக்குதல்: தொழிலாளி மீது வழக்கு

தெருநாய் மீது தாக்குதல் நடத்தியதாக தொழிலாளி மற்றும் அவரது தாயாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

தெருநாய் மீது தாக்குதல் நடத்தியதாக தொழிலாளி மற்றும் அவரது தாயாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, வடவள்ளியை அடுத்த வீரகேரளம் கே.கே.நகரில் தெருநாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால், அப்பகுதியினா் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனா். இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தனது வீட்டு முன்பு திரிந்த ஒரு தெருநாயை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கி இழுத்துச் செல்லும் விடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

இதைப் பாா்த்த சமூக ஆா்வலா்கள், விலங்கின ஆா்வலா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இந்நிலையில், நாயைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மினி, வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில், நாயைத் தாக்கியது கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த பாலு என்பதும், அப்பகுதியில் உள்ள நிறுனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் பாலு மற்றும் அவரது தாயாா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT