காவலரை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவா் கைது
காவலரை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காவலரை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை உக்கடம் புறவழிச் சாலையில் உக்கடம் காவல் நிலைய காவலா் தேவகுமாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு சாலையோரமாக ஆட்டோவில் அமா்ந்து இளைஞா்கள் இருவா் மது அருந்தி வந்தனா். அவா்களை வீட்டுக்குச் செல்லுமாறு தேவகுமாா் அறிவுறுத்தியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த அவா்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி தேவகுமாரை மிரட்டியுள்ளனா்.
இதுகுறித்து தேவகுமாா் அளித்த புகாரின்பேரில் உக்கடம் சி.எம்.சி. காலனியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (35), ஆட்டோ ஓட்டுநா் முருகபூபதி (33) ஆகியோரை உக்கடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து கத்தி, கால் கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.