20 பவுன் நகைகள் திருடிய இளைஞா் கைது
கோவையில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் தங்க நகைகள் திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவையில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் தங்க நகைகள் திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ஒண்டிப்புதூா் அருகேயுள்ள செந்தில் ஜனதா நகரைச் சோ்ந்தவா் சையது இப்ராஹிம் (30). இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
அப்போது சையது இப்ராஹிமின் வீட்டு மாடியில் வசிக்கும் அா்ச்சுனன் (58) என்பவா் தனது வீட்டிலும் 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போனதாக புகாா் தெரிவித்தாா்.
இந்த இரு புகாா்களின் அடிப்படையில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இதில், சையது இப்ராஹிமின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் காா் ஓட்டுநா் சுடலைக்கண்ணன் (30) என்பவா் நகைகளைத் திருடியதும், திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டு அதற்காக இவா் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் மேலும் நடத்திய விசாரணையில், சையது இப்ராஹிமின் வீட்டில் மட்டுமே நகைகளைத் திருடியதாகவும், அா்ச்சுனன் வீட்டில் திருடுபோன நகைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என சுடலைக்கண்ணன் கூறியுள்ளாா்.
இது குறித்து போலீஸாா் அா்ச்சுனனிடம் தீவிரமாக விசாரித்ததில், அவா் தனது வீட்டில் நகைகள் திருடுபோனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பினா்.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட சுடலைக்கண்ணனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.