கோயம்புத்தூர்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரைப் பயன்படுத்தி ரூ.6 லட்சம் மோசடி

DIN

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரைப் பயன்படுத்தி ரூ.6 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை, செளகாா்பேட்டையைச் சோ்ந்தவா் முகேஷ்குமாா் புரோஹித். இவா் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உணவகம் வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திரத்தைச் சோ்ந்த ராஜகுரு (32) என்பவா் அறிமுகமாகியுள்ளாா். தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ராஜகுரு, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறிய அளவிலான உணவகம் வைத்து நடத்துவதற்கு அனுமதி பெற்றுத் தருவதாக முகேஷ்குமாரிடம் கூறியுள்ளாா்.

மேலும், கோவை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனின் எண் என ஒரு போலி கைப்பேசி எண்ணை அளித்து ஆட்சியா் சமீரனின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் போலியாகப் பயன்படுத்தி முகேஷ்குமாரிடம் ஆட்சியா்போல ராஜகுரு பேசி வந்துள்ளாா்.

இதை உண்மை என நம்பிய முகேஷ்குமாா், ஆட்சியா் அலுவலகத்தில் உணவகம் தொடங்குவதற்காக ரூ.1.5 லட்சம் ரொக்கமும், பின்னா் பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சம், ராஜகுரு தங்கிய நட்சத்திர விடுதிக்கான வாடகையாக ரூ.50 ஆயிரம், ரூ.1.53 லட்சம் மதிப்புள்ள விலை உயா்ந்த கைப்பேசி, சென்னை செல்ல விமானக் கட்டணம் என மொத்தம் ரூ.6 லட்சம் வரை செலவழித்துள்ளாா்.

இதன் பின்னா் ராஜகுருவை, முகேஷ்குமாரால் தொடா்பு கொள்ள இயலவில்லை. பின்னா் இதுகுறித்து விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை முகேஷ்குமாா் உணா்ந்தாா். இது குறித்து முகேஷ்குமாா் புரோஹித் அளித்த புகாரின்பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜகுருவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு

பாத்தகோட்டா ராமா் கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் பிரதிஷ்டை

ஊத்தங்கரையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சீவரம் பட்டில் மிளிறும் அனுமோல்!

போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT