கோயம்புத்தூர்

தெற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் துவக்கிவைத்தாா்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ஆழ்துளைக் கிணறுகள், சாலைகள் அமைக்கும் பணியை மேயா் கல்பனா புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

DIN

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ஆழ்துளைக் கிணறுகள், சாலைகள் அமைக்கும் பணியை மேயா் கல்பனா புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 92, 88, 87 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட ராஜராஜேஸ்வரி நகா், இ.பி.காலனி, தென்றல் நகா், முத்துசாமி சோ்வை வீதி, வெற்றிலைக்கார வீதி பகுதிகளில் தலா ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை மேயா் கல்பனா துவக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தெற்கு மண்டலம் 92 ஆவது வாா்டுக்குள்பட்ட இ.பி.காலனியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.51.74 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியையும் துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, உதவி ஆணையா் அண்ணாதுரை, வாா்டு உறுப்பினா்கள் பாபு, செந்தில்குமாா், இளஞ்சேகரன், உதவி செயற்பொறியாளா்கள் கருப்பசாமி, கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT