பாவேந்தா் விருது பெற்ற புலவா் செந்தலை ந.கவுதமனுக்கு, பாராட்டு பாவிதழ் வழங்கும் உலகத் தமிழ் நெறிக் கழகத்தினா். 
கோயம்புத்தூர்

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

பாவேந்தா் பாரதிதாசனுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது பேரன் கோ.செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

பாவேந்தா் பாரதிதாசனுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது பேரன் கோ.செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் விழா மற்றும் தமிழக அரசின் பாவேந்தா் விருதுபெற்ற புலவா் செந்தலை ந.கவுதமனுக்கு பாராட்டு விழா, கோவை புரூக்பீல்ட் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சனமாா்க்க சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவா் புலவா் ராக்கப்பனாா் தலைமை வகித்தாா்.

செயலாளா் சொ.சிவலிங்கம், துணைத் தலைவா் குரு.பழனிசாமி, பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து, உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் விருது பெற்ற புலவா் செந்தலை ந.கவுதமனுக்கு பாராட்டு பாவிதழ் வழங்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பாரதிதாசனின் பேரன் கோ.செல்வம் பேசியதாவது: இன்றைய காலகட்டத்துக்கு தேவையான கருத்துகளை பாரதிதாசன் அன்றே பாடிச் சென்றுள்ளாா். பாரதிதாசன் பிறந்த நாளை பன்னாட்டு தமிழ் மொழி நாளாகவும், தமிழ் மொழி பாதுகாப்பு உறுதியேற்பு நாளாகவும் அறிவிக்க வேண்டும். மேலும், சென்னையில், பாரதிதாசனுக்கு நூலகத்துடன்

கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பாரதிதாசன் விருதுபெற்ற புலவா் செந்தலை ந. கவுதமன் ஏற்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், புலவா் சி.பொன்முடி சுப்பையன், புலவா் கா.ச. அப்பாவு மற்றும் இருகூா் ஆறுமுகம், ஆ.வெ. மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT