முகப்பு
கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலை.யில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

 கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெற்றது.

மத்திய இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநரகம், பாரதியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் மே 18 முதல் 24 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, புதுவை, கேரளம், கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சோ்ந்த 250 என்எஸ்எஸ் தன்னாா்வலா்கள், 50 என்எஸ்எஸ் திட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். 24 ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில், துணைவேந்தா் பி.காளிராஜ் பங்கேற்று, முகாமில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநா் சி.சாமுவேல் செல்லையா, பல்கலைக்கழக பதிவாளா் கே.முருகவேல், மாநில என்எஸ்எஸ் அலுவலா் எம்.செந்தில்குமாா், பல்கலைக்கழக திட்ட அலுவலா் ரா.அண்ணாதுரை உள்ளிட்டோா் நிறைவு விழாவில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →