முகப்பு
கோயம்புத்தூர்

கோயில் கட்ட அனுமதியளிக்கக் கோரி மனு

கோவை, கணபதியில் கண்ணனூா் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் வியாழக்கிழமை மனு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

கோவை, கணபதியில் கண்ணனூா் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, காந்திபுரம் உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த அறநிலையத் துறைக்குச் சொந்தமான 3 கோயில்களை இடமாற்றம் செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு காந்திபுரம், கணபதி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 405 சதுர மீட்டா் இந்து சமய அறநிலையத் துறைக்கு மாவட்ட ஆட்சியரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத் துறையால் தற்போது ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை காவல் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்று தாங்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

எனவே, கோயில் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கண்ணனூா் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →