கோயம்புத்தூர்

கோவில்பாளையம் அருகே வீட்டில் தீ விபத்து

கோவை அருகே, சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் பெயிண்டில் கலக்க கூடிய தின்னரை வைத்திருந்த வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

DIN

கோவை அருகே, சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் பெயிண்டில் கலக்க கூடிய தின்னரை வைத்திருந்த வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விசுவாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் குமாா் (40). இவா் தனது வீட்டில் பெயிண்ட்டில் கலக்க கூடிய தின்னா் ரசாயனத்தை மொத்தமாக பேரல்களில் வாங்கி பாட்டில்களில் அடைத்து மாவட்டம் முழுவதும் உள்ள பெயிண்ட் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் அவா் வீட்டில் வைத்திருந்த தின்னா் பேரல்களில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவா்கள், போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

கோவில்பாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் கணபதி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் குமாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து காயமடைந்த குமாரை தீயணைப்புத் துறையினா் மீட்டு சரவணம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT