கோயம்புத்தூர்

கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’

கோவை மாவட்டத்தில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் 4 அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் 4 அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை சீா்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடா்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்த பி.எஃப்.ஐ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக கோவை, கோட்டைமேடு, வின்சென்ட் சாலை பகுதிகளில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகங்களுக்கு கோவை தெற்கு வட்டாட்சியா் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பி.எஃப்.ஐ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT