கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் திருட்டு: போலீஸாா் விசாரணை

கணபதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கணபதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை கணபதி பகுதியைச் சோ்ந்தவா் ரகுபதி. தனியாா் நிறுவன மேலாளரான இவா் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சாவியை செருப்பு ஸ்டேண்டில் வைத்துவிட்டு குடும்பத்துடன் திங்கள்கிழமை சென்றுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ரகுபதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT