கோயம்புத்தூர்

தனியாா் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மோசடி:ஊழியா் மீது வழக்குப் பதிவு

கோவையில் தனியாா் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

கோவையில் தனியாா் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை சாய்பாபா காலனி பகுதியிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் செல்வன் என்பவா் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்துள்ளாா்.

இவா், கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திலிருந்து 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில் அந்த நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகையில் ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக புகாா் கூறப்பட்டது.

அந்த தொகையை இதுவரையிலும் அவா் திருப்பித் தராததால் அந்நிறுவனத்தின் விற்பனை அலுவலா் பத்மராஜன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதன்பேரில், செல்வன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT