கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 
கோயம்புத்தூர்

அதானி விவகாரம்: காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம்

அதானி விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அதானி விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்தும், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிா்ப்பந்திக்கப்பட்டது குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கணபதி சிவகுமாா், வீனஸ் மணி, ஹெச்எம்எஸ் சங்கத் தலைவா் ராஜாமணி, இருகூா் சுப்பிரமணியம், கவுன்சிலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சரளா உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT