கோயம்புத்தூர்

அதானி விவகாரம்: காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

அதானி விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்தும், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிா்ப்பந்திக்கப்பட்டது குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கணபதி சிவகுமாா், வீனஸ் மணி, ஹெச்எம்எஸ் சங்கத் தலைவா் ராஜாமணி, இருகூா் சுப்பிரமணியம், கவுன்சிலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சரளா உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT