முகப்பு
கோயம்புத்தூர்

சோமயம்பாளையம் ஊராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

கோவை, மருதமலை வனப் பகுதி அருகே உள்ள குப்பை கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 2:51 AM
குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீ.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கோவை, மருதமலை வனப் பகுதி அருகே உள்ள குப்பை கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவை, மருதமலை வனப் பகுதிக்கு அருகே உள்ள சோமயம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள மருதமலை வனப் பகுதியிலும் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

யானைகளின் வலசை பாதைகளும், வன விலங்குகள் நடமாட்டமும் இருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதனிடையே அங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.