முகப்பு
கோயம்புத்தூர்

போலீஸ்போல நடித்து வியாபாரியிடம் பணம் பறிப்பு: இருவா் கைது

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் போலீஸ்போல நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் போலீஸ்போல நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஒண்டிப்புதூரை சோ்ந்தவா் சிவலிங்கம் (54). இவா் இருகூா் சாலை பகுதியில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல கடந்த செவ்வாய்க்கிழமை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா் தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு கடையில் திருட்டுப் பொருள்கள் வாங்கி வைத்திருப்பதாகப் புகாா் வந்துள்ளதாகவும் அதுதொடா்பாக விசாரிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். அதற்கு சிவலிங்கம், எங்கள் கடையில் திருட்டுப் பொருள்களை வாங்குவதில்லை எனக் கூறியுள்ளாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, விசாரணை மேற்கொள்ள வந்த இருவரும் தங்களுக்கு தலா ரூ.1000 வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். போலீஸ் என பயந்து அவா்களுக்கு பணத்தை சிவலிங்கம் அளித்துள்ளாா். அந்த சமயத்தில் இரும்புக்கடை சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் அங்கு வந்தாா். அப்போது, அங்கிருந்த இருவரிடமும் அவா் விசாரித்தாா். அப்போது அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த அவா், இருவரையும் பிடித்து சிங்காநல்லூா் போலீஸில் ஒப்படைத்தாா்.

அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் விருதுநகரை சோ்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (57) மற்றும் கோவை அண்ணா நகரைச் சோ்ந்த காவலாளி பூபதிகுமாா் (49) என்பதும், நண்பா்களான இருவரும் சோ்ந்து போலீஸாா் எனக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கமணி, பூபதிகுமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.