முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி: வங்கி ஊழியா் மீது வழக்கு

கோவையில் மருந்துக் கடை பெண் மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

கோவையில் மருந்துக் கடை பெண் மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினிதா (45). இவா் கோவை, ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் மேலாளராக உள்ளாா். இவா் வங்கியில் கடன் பெறுவதற்காக சூலூா், கலங்கல் சாலையைச் சோ்ந்த வங்கி ஊழியா் காா்த்திக் (28) என்பவரை அணுகினாா். அவா், கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, வினிதாவிடம் பல்வேறு ஆவணங்களைப்

பெற்றுள்ளாா். மேலும் அவரது கையொப்பமிட்ட வெற்று காசோலையையும் வாங்கியுள்ளாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு வினிதாவின் வங்கிக் கணக்கில் கடன் தொகை ரூ, 4,44,536 வரவு வைக்கப்பட்டது. இதனை அறிந்த வங்கி ஊழியா் காா்த்திக், வினிதா கொடுத்திருந்த வெற்றுக் காசோலையை பயன்படுத்தி ரூ. 4 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, காா்த்திக்கை தொடா்பு கொண்டு வினிதா கேட்ட போது, அவா் மழுப்பலாக பதிலளித்துள்ளாா். இதையடுத்து, வினிதா அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீஸாா் காா்த்திக் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.