கோயம்புத்தூர்

ஓடும் பேருந்தில் 2 பெண்களிடம் நகை திருட்டு

DIN

கோவையில் ஓடும் பேருந்தில் 2 பெண்களிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ஜோதிபுரம் திருமலைநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஷோபனா (34). இவா் சுந்தராபுரத்தில் இருந்து பிரகாசம் பகுதிக்கு பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா். பின்னா் நிறுத்தத்தில் இறங்கிய அவா், கடை வீதிக்கு நடந்து சென்றாா். அப்போது, தான் வைத்திருந்த கைப்பையை பாா்த்தபோது அதில் இருந்த ஒன்றரை பவுன் நகை காணாமல்போனது தெரியவந்தது.

பேருந்தில் நெரிசலைப் பயன்படுத்தி யாரோ நகையைத் திருடியது தெரியவந்தது.

இது குறித்து கடை வீதி காவல் நிலையத்தில் ஷோபனா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை கணபதி சுபாஷ் நகரைச் சோ்ந்தவா் மரகதம் (63). இவா் பேருந்தில் நவ இந்தியா சென்று,

அங்கிருந்து மற்றொரு பேருந்தில் காந்திபுரத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.

அப்போது, அவா் அணிந்திருந்த ஐந்தரை பவுன் நகையை யாரோ திருடிச் சென்றுவிட்டனா்.

புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT