மரக்கிளை முறிந்து விழுந்து காா் சேதம்
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.
கோவை: கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.
கோவை போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ் (40). இவா் புலியகுளத்தில் இருந்து ராமநாதபுரம்-திருச்சி சாலையில் காரில் திங்கள்கிழமை மாலை சென்றாா். ராமநாதபுரத்தில் சிக்னலுக்காக காரை நிறுத்தி காத்திருந்தாா். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து காரின் மீது விழுந்தது.
இதில், காரின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக சேதமடைந்தது. காரை ஓட்டிச் சென்ற ராஜீவ் காயமின்றி தப்பினாா். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையை, மாநகராட்சி ஊழியா்கள் மரக்கிளையை அகற்றினா்.