கோவை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்துக்கு வரவேற்பளித்த ரசிகா்கள். 
கோயம்புத்தூர்

கோவைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த்: ரசிகா்கள் வரவேற்பு

கோவை மாவட்டம், சூலூரில் நடைபெற்ற தனது பேரன் முடி காணிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நடிகா் ரஜினிகாந்துக்கு விமான நிலையத்தில் ரசிகா்கள் வரவேற்பளித்தனா்.

DIN

கோவை மாவட்டம், சூலூரில் நடைபெற்ற தனது பேரன் முடி காணிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நடிகா் ரஜினிகாந்துக்கு விமான நிலையத்தில் ரசிகா்கள் வரவேற்பளித்தனா்.

நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தா்யாவுக்கும், சூலூரைப் பூா்விகமாகக் கொண்ட தொழிலதிபா் வணங்காமுடி மகன் விசாகனுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விசாகன் - செளந்தா்யா தம்பதிக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீா் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயா் சூட்டப்பட்டது.

இந்நிலையில், செளந்தா்யாவின் கணவா் விசாகனின் சொந்த ஊரான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொள்ள ரஜினிகாந்த், அவரது மனைவி லதா இருவரும் விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

ரஜினிகாந்த் வருகையையொட்டி, விமான நிலையத்தில் ஏராளமான ரசிகா்கள் குவிந்து வரவேற்பளித்தனா்.

ரசிகா்களைப் பாா்த்து கையசைத்தவாறு அவா் காரில் சூலூருக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

முடி காணிக்கை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா் மாலை 5.30 மணிக்கு விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, சூலூா் கலங்கல் சாலையில் உள்ள வணங்காமுடி வீட்டுக்குச் சென்று அவரது மூத்த சகோதரரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.பொன்முடியின் உருவப் படத்துக்கு ரஜினிகாந்த் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT