முகப்பு
கோயம்புத்தூர்

108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

கோவை, நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:20 AM
பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்.
பகிர்:


கோவை: கோவை, நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

கோவை, நல்லாம்பாளையம் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மனைவி மம்தா (29). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு திங்கள்கிழமை இரவு பிரசவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, மம்தாவுக்கு வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியில் வந்திருந்தது. இதையடுத்து, மம்தாவை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணா் கோபாலகிருஷ்ணன், பைலட் ஜெயகுமாா் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பாா்த்தாா்.

Advertisement

இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அருகில் உள்ள மீனாட்சி தாய், சேய் நல மருத்துவமனையில் மம்தா மற்றும் குழந்தையை அனுமதித்தனா். அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனா். பிரசவம் பாா்த்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை அனைவரும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments