இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
விமான சேவையை விரிவுபடுத்தும் மாலத்தீவு...
இந்தியாவுக்கான விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்கான விமான சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அதனை மேலும் விரிவுபடுத்த மாலத்தீவு தேசிய விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனை, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இயாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் பல நகரங்களுக்கு மாலத்தீவு விமான சேவை விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கடந்த 18 ஆண்டுகளாக மாலத்தீவின் சர்வதேச பயணத்தில் இந்தியா ஒரு அங்கமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கான விமான சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதனைக் கொண்டாடும் விதமாக மாலத்தீவு விமான நிறுவனம் இந்தியாவில் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வில் பங்குதாரர்கள், விமானக் குழு உறுப்பினர்கள் என பலரும் கொலந்துகொண்டனர்.
மாலத்தீவிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 முதல் 12 நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பல இணைப்பு விமானங்கள் இலங்கையிலிருந்து இந்தியா வழியே இயக்கப்படுகின்றன.
ஆனால் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Maldivian airline eyes extending services to more Indian cities
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.