திருச்சி - ஷாா்ஜா இடையே நாளை முதல் கூடுதல் விமான சேவை
திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.
திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தினசரி ஒரு சேவையை இருவழித் தடங்களிலும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, திருச்சி - ஷாா்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்கவுள்ளது. இதன்மூலம் திருச்சி - ஷாா்ஜா இடையே வாரத்துக்கு 7 ஆக இருந்த விமான சேவை 10-ஆக உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தக் கூடுதல் விமான சேவை ஜூலை 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.