முகப்பு
திருச்சி

திருச்சி - ஷாா்ஜா இடையே நாளை முதல் கூடுதல் விமான சேவை

திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 3:11 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தினசரி ஒரு சேவையை இருவழித் தடங்களிலும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, திருச்சி - ஷாா்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்கவுள்ளது. இதன்மூலம் திருச்சி - ஷாா்ஜா இடையே வாரத்துக்கு 7 ஆக இருந்த விமான சேவை 10-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தக் கூடுதல் விமான சேவை ஜூலை 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments