கோவை அரசு  மருத்துமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தலைமையிலான குழுவினா். உடன், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

செம்மொழிப் பூங்கா பணி 40 சதவீதம் நிறைவு: சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவா்

கோவை செம்மொழிப் பூங்கா பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

Din

கோவை, ஆக. 21: கோவை செம்மொழிப் பூங்கா பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவரும், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான குழுவினா், கோவை செம்மொழிப் பூங்கா பணிகள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா், அமைச்சா்களால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் சட்டப் பேரவையில் அறிவித்தபடி நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்வதே சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் பணியாகும்.

அதன்பி, கோவையில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. செம்மொழி பூங்கா பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 2025 மே மாதத்திற்கு பூங்கா பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்று சம்பந்தப்பட்ட துறைகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், காந்திபுரத்தில் உள்ள காவலா்களுக்கான குடியிருப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீராவி சலவை இயந்திரம் அமைக்கும் பணி, மேற்கு புறவழிச் சாலை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கூடம், மருதமலையில் ரோப்காா் அமைப்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட என்றாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5 மாணவா்களுக்கு வங்கி பற்று அட்டைகள், 3 பேருக்கு தலா ரூ.7.88 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 2 பேருக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.81,147 மதிப்பில் இருசக்கர வாகனம் என 17 பேருக்கு ரூ.33.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT