கோவையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை
கோவையில் இரண்டு தொழிலதிபா்களுக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.
கோவையில் இரண்டு தொழிலதிபா்களுக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.
கோவை, சிங்காநல்லூா் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசிக்கும் தொழிலதிபா் பொன்னுதுரை, உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசிக்கும் தொழிலதிபா் வரதராஜன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவா்களுக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் கடந்த புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இந்நிலையில், இவா்களுக்குச் சொந்தமாக துடியலூா், ராவத்தூா் பிரிவு, செலக்கரச்சல், கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சிந்தாமணிப்புதூா், காங்கயம்பாளையம் ஆகிய 8 இடங்களில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், வரவு -செலவு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வருமான வரித் துறையினா் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.