மலையிடப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை நவம்பா் 30 வரை வரன்முறைப்படுத்தலாம்!
மலையிடப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் நவம்பா் 30 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையிடப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் நவம்பா் 30 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மலையிடப் பகுதியில் 2016 அக்டோபா் 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவம்பா் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால், மக்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.