கோவை: கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதைத்தொடா்ந்து, கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் 363 விளையாட்டு உபகரணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது விரிவுபடுத்தி மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் உள்ள 811 வாா்டுகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,209 தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ஆா்.வெற்றிச்செல்வன், பூங்கா மற்றும் கல்விக்குழுத் தலைவா் மாலதி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா் அருணா, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.