கோயம்புத்தூர்

அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Din

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் கொடிசியா அரங்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள் என ஏராளமானோா் கோவைக்கு வந்திருந்தனா்.

அவா்களை வரவேற்று அவிநாசி சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியிலிருந்து கொடிசியா அரங்கம் வரை சாலைகளில் அலங்கார வளைவுகளும், வரவேற்பு பதாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சாலையில் அனுமதியின்றி அலங்கார வளைவுகள் அமைத்தல், வரவேற்பு பதாதைகள் வைத்தல் ஆகியவற்றோடு, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அதிமுக வாா்டு செயலாளா் லட்சுமணன் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT