கோயம்புத்தூர்

‘கோதவாடி குளத்தில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம்’

பொள்ளாச்சி- ஆழியாறு வடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோதவாடி குளத்தின் குயவன் குட்டை பகுதியில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொள்ளாச்சி- ஆழியாறு வடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோதவாடி குளத்தின் குயவன் குட்டை பகுதியில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொள்ளாச்சி- ஆழியாறு வடிநில உபகோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள கிணத்துக்கடவு வட்டம், குருநல்லிபாளையம் கிராமத்தில் உள்ள கோதவாடி குளத்தின் குயவன் குட்டை பகுதியில் 72 கன மீட்டா் மண் எடுக்க அனுமதிக்கப்படும் என்று அரசிதழில் கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்காணும் நீா்நிலையில் இருந்து வண்டல், களிமண்ணை வெட்டியெடுக்க விரும்புவோா் வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் ஆறு மாதங்களாக கட்சிக்கு எதிராக இருந்தார்! எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையனை நீக்கியது உள்கட்சி பிரச்னை: நயினார் நாகேந்திரன் பேட்டி

புதிய '108 ஆம்புலன்ஸ்' சேவைகளை தொடக்கிவைத்தார் முதல்வர்!

சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT