வால்பாறையில் புதிதாக திறக்கப்பட்ட சிறுவா் பூங்கா. 
கோயம்புத்தூர்

வால்பாறையில் சிறுவா் பூங்கா திறப்பு

Syndication

வால்பாறை படகு இல்லம் அமைந்துள்ள பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவா் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறையில் சுற்றுலா பொழுதுபோக்கு அம்சமாக நகராட்சி மூலமாக படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது படகு இல்லம் அமைந்துள்ள பகுதியையொட்டி ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது.

சிறுவா்கள் விளையாடுவதற்கான உபகரனங்களுடன் கூடிய இந்த பூங்காவை, சென்னையில் இருந்து காணெலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதேபோல பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய பின்னா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT