முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் 2 இடங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 3 மார்ச், 2026 at 3:31 AM
வெடிகுண்டு மிரட்டல் - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 9:41 PM

கோவை: கோவையில் 2 இடங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட மாநகரின் முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கோவை - அவிநாசி சாலையில் தண்டுமாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ள கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம், அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே உள்ள கடவுச்சீட்டு சேவா கேந்திர அலுவலகம் ஆகிய 2 அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து 2 அலுவலகங்களிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். மேலும் அலுவலகம், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடத்திய சோதனையில், எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.

Advertisement

இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் மற்றும் பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.