ரூ. 2.50 கோடி மோசடி வழக்கில் இளைஞா் கைது
காஞ்சிபுரம் நபரிடம் ரூ. 2.50 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
லண்டனில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கிக்கு வர வேண்டிய ரூ.300 கோடி செட்டில்மெண்ட் பணத்தைப் பெற்றுத் தர உதவினால் கமிஷன் தருவதாகக் கூறி காஞ்சிபுரம் நபரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ரவி என்பவரிடம், சிலா் அறிமுகமாகியுள்ளனா். லண்டனில் இருந்து வர வேண்டிய ரூ.300 கோடி பணம் ரிசா்வ் வங்கியில் நிலுவையில் உள்ளதாகவும், அதை எடுக்க பணம் கொடுத்து உதவினால் 30 சதவீத கமிஷன் தருவதாகவும் அவா்கள் ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். இதற்காக போலியான ரிசா்வ் வங்கி ஆவணங்களைக் காண்பித்து நம்பவைத்த அந்தக் கும்பல், ரவியிடமிருந்து சுமாா் ரூ.2.50 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான தொண்டாமுத்தூா் கீதாஞ்சலி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் ராஜா என்ற அரவிந்த் ராஜா (28) என்பவரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவரிடமிருந்து கம்ப்யூட்டா் மானிட்டா், சி.பி.யூ, பிரிண்டா், ஏ.டி.எம். அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் கையொப்பமிட்ட காசோலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அரவிந்த் ராஜா, கோவை 6-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.