தாளவாடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த தொழிலாளர் மகேஷ் உயிரிழந்தார்.
பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மகேஷ் ((32), ஸ்ரீதர் (52) ஆகியோர் தாளவாடிக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். இருமாநில எல்லையான கோழிப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மோதியதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஸ்ரீதர், சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.