ஈரோடு

அனைவருக்கும் வீடு திட்டம்: பெருந்துறையில் 85 பேருக்கு ஆணை

DIN

அனைவருக்கும் வீடு திட்டம் 2016-17 இன் கீழ், பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
 விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று, பெருந்துறை பேரூராட்சியைச் சேர்ந்த 58 பயனாளிகளுக்கும், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 27 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
 இத்திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு மத்திய அரசு ஒதுக்கீடு ரூ. 1.50 லட்சம், மாநில அரசு ஒதுக்கீடு ரூ. 60 லட்சம், பயனாளியின் பங்கு ரூ. 1.05 லட்சம். வீட்டின் மொத்த மதிப்பீடு ரூ. 3.15 லட்சமாகும்.
 இதில், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன், நிலவள வங்கித் தலைவர் சேனாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT