ஈரோடு

மாநில கால்பந்துப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

DIN

திருநெல்வேலியில் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்க மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
குறுமையம், மண்டலம்,  மாவட்ட அளவிலான மிக மூத்தோருக்கான கால்பந்துப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.
இதில், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்து, மாநில அளவிலான அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான மிக மூத்தோர் கால்பந்துப் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் 9 முதல் 11-ஆம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளித் தலைமையாசிரியர் சொர்ணாம்பிகை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT