ஈரோடு

மகளிர் வார விழா விருதுகள் வழங்கல்

DIN

ஈரோடு மகளிர் வார விழாவை முன்னிட்டு மகளிரை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
ஈரோடு, ஜேசிஐ அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு கோட்டாட்சியர் ஆர்.நர்மதா தேவி தலைமை வகித்தார். 
விழாவில், கல்வியாளருக்கான விருது மாலதி ராஜேந்திரனுக்கும், சமூக சேவைக்கான விருது, வி.உமா மகேஸ்வரிக்கும், இயற்கை விவசாயிக்கான விருது ஆர்.மேகலாவுக்கும், விளையாட்டு வீராங்கனைக்கான விருது  வி.லேக்ஹா, எம்.கெளசல்யா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. 
முன்னதாக, ஈரோடு ஜேசிஐ அமைப்பின் தலைவர் ஜெ.சரவணன் வரவேற்றார். 
சிறப்பு விருந்தினராக மண்டலத் தலைவர் சுகந்தி சரவணன் கலந்துகொண்டார். இதில், மகளிர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT