ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 429 பேருக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்
பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் மனிதவள
பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் இலவசத் தொழில்பயிற்சியை நிறைவு செய்த 429 பேருக்குச் சான்றிதழ் மற்றும் 10 பேருக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளரும், கட்டடவியல் துறைப் பேராசிரியருமான பி.ஆர்.நாகராஜன் வரவேற்றார். ஈரோடு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எல்.பூபதி, சாய்ராம் அறக்கட்டளை நிறுவனர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு ஈரோடு தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளர் கே.கே.பாலுசாமி தனது சொந்த செலவில் தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், இலவசத் தொழிற்பயிற்சி பெற்ற ஆப்பக்கூடல், அத்தாணி, கோபி, பவானி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளைச் 429 பேருக்குச சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், பேராசிரியர்கள் ஆர்.பார்த்திபன், பி.கே.சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.