வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மரக்கன்றுகள்
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் வனத் துறை காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் வனத் துறை காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
வனத் துறையின் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேக்கு, மலைவேம்பு மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மட்டும் 2.50 லட்சம் தேக்கு, மலைவேம்பு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இதைப் பாதுகாப்பது, சொட்டுநீர்ப் பாசன நிதியுதவி மற்றும் பராமரிப்பு போன்றவை குறித்து முன்னோடி பெண் விவசாயி கௌசல்யா விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து வனச் சரக அலுவலர்கள் மரக்கன்றுகள் நடவு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மரம் வளர்ப்பதால் வருவாய் கிடைப்பதுடன் மழைநீர் பொழிய உதவும் எனவும் எடுத்துரைத்தனர்.