அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள்
அரசுப் பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரசுப் பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு அருகே வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-ஆம் ஆண்டு பிளஸ் 2 (வணிகவியல் பிரிவு) பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் 40 பேர், அவர்களின் குடும்பத்தினருடன் பள்ளியின் விளையாட்டுப் பயிற்சிக்கு உதவும் வகையில் விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள், மாற்றங்கள் குறித்த நிகழ்வுகளைப் பறிமாறிக் கொண்டனர். முன்னாள் தலைமையாசிரியர் ஜானகிராமன், ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
முன்னதாக, தங்களுடன் பயின்ற மாணவ, மாணவி, 2 ஆசிரியர்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி விளையாட்டு ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.