ஈரோடு சகோதயா சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கோ-கோ விளையாட்டுப் போட்டியில், பெருந்துறை சாகர் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
நாமக்கல், பார்க் பப்ளிக் பள்ளியில் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. பள்ளி அணிகள் கலந்துகொண்டன.
இப்போட்டியில், பெருந்துறை சாகர் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் இடமும், 12, 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 2 ஆவது இடமும் பிடித்தனர். மாணவிகள் 12, 14, 16 வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளித் தாளாளர் சி.சௌந்திரராசன், நிர்வாகிகள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.