ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய இருவர் மாயம்

DIN


கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது பள்ளி மாணவர், கட்டடத் தொழிலாளி ஆகியோர் நீரில் மூழ்கி மாயமாகினர்.
அன்னூரை சேர்ந்த கட்டடத் தொழிலாளி மன்சூர் (31). இவரது உறவினர் மகன் ஆசிப் அகமது (14), அன்னூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆவது படித்து வந்தார். அன்னூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள், பவானிசாகர் டணாய்க்கன்கோட்டை கீழ்பவானி வாய்க்காலில் குளித்தனர். அப்போது, வேகமாக வந்த நீரில் மாணவர் ஆசிப் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மன்சூரும் நீரில் மூழ்கினார்.
அங்கு கரையில் இருந்த கிராம மக்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, பவானிசாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT