ஈரோடு

பி.கே.ஆர். கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் கணினி  அறிவியல் துறையின் சார்பில், சைபர் கிரைம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரித் தாளாளர், செயலாளர் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். கருத்தரங்கின் கருதுகோள் குறித்து கணினி இணைப் பேராசிரியர்  எஸ்.ஜெயசங்கரி விளக்கி கூறினார். கல்லூரி முதல்வர் டி.மைதிலி வரவேற்றார். சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் பேராசிரியர் நஷிரா, கைப்பேசியின் பயன்பாடுகள், அதனை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை வலியுறுத்தினார்.
கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி கணினி துறைத் தலைவர் பேராசிரியர் பி.முரளி கலந்துகொண்டு இணையதள குற்றம் குறித்தும், அதனை எப்படி கையாளுவது என்பது குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
கோவை தனியார் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.ரவிசந்திரன் கைப்பேசிகள்  மூலம் வரும் பிரச்னைகள், இணையதள குற்றங்களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைத்தார்.  இதில், கல்லூரி துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, பேராசிரியர்கள், பல கல்லூரிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பெருந்துறை கல்லூரிப் பேராசிரியர் ஜி.கிளாஸ்டன் நிறைவுரையாற்றினார். கருத்தரங்க   அறிக்கையை கணினித் துறைப் பேராசிரியர் ஜி.தீபா வாசித்தார். பேராசிரியர் டி.கார்த்திகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT