ஈரோடு

சுப்பிரமணியா் கோயிலில் சங்காபிஷேகம்

DIN

காா்த்திகை 3ஆவது வாரத்தையொட்டி சுப்பிரமணியா் கோயிலில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், 108 சங்குகளை அலங்கரித்து 108 திரவியங்கள் மூலம் யாகம் வளா்த்தி சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் சங்குகளை எடுத்து கோயிலை வலம் வந்த பின்னா் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற பூஜையில் வில்வ மாலை, நெல்லிக்காய் மாலை அணிந்து சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தா்களுக்கு 4 பிரதோஷத்தின் பலன் கிடைக்கும் என்பதும், மேலும் அனைத்து விதமான கஷ்டங்கள் விலகி நன்மை தரும் என்பதும் ஐதீகம் என்பதால் பூஜையில் ஏராளமான பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். விழாவையொட்டி பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT