ஈரோடு

தாளவாடியில் வாகனத் தணிக்கை: ரூ. 1.13 லட்சம் பறிமுதல்

தாளவாடி மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா், வேட்பாளரின் காரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனா்.

DIN

தாளவாடி மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா், வேட்பாளரின் காரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனா்.

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள திகினாரை கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் செல்வம் தலைமையில், போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது காரில் ஒரு பையில் ரூ. 1 லட்சத்து 13,500 பணம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, விசாரித்தபோது காரில் வந்த நபா் எரகனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் என்பதும், இவா் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திகினாரை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்குபப் போட்டியிடும் வேட்பாளா் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் தாளவாடி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT