ஈரோடு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் புதுவள்ளியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் விரிவாக்கப் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை பற்றிய விரிவாக்க செயல்பாடுகள் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
இதில் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை கல்லூரி மேலாண்மைத் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் வழங்கினர். அதில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுப்புற மாசுபாடு, உடல்நலக்கேடு, மண்ணின் வளம் கெடுதல், விலங்கினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு, உணவுப் பண்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய், பிளாஸ்டிக்கின் மாற்றுப்பொருளான மண்பாண்டம் மற்றும் சணல் பொருள்களை உபயோகிப்பதற்குப் பழக்கப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்பாக பேசியவர்களுக்கு பேராசிரியர் எஸ்.பார்த்திபன் பரிசுகள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT